மதுரை ஆதினத்தின் இளைய மடாதிபதி பதவியில் இருந்து நித்யானந்தர் நீக்கப் பட்டுவிட்டார்!அவர் நல்லவரா கெட்டவரா என்பதைப் பற்றிய ஆராய்ச்சியை உங்களிடமே விட்டு விட்டு, ஒன்று மட்டும் இங்கே பதிவு பண்ண விரும்புகிறோம்.

ஒரு பொறுப்பான ,அனைவரும் மதிக்கத்தக்க,இறை சம்பந்தப் பட்ட ஒரு பதவியில் அனைவருக்கும் பிடித்த,அனைவரும் மதிக்கத்தக்க ஒருவரை அமர்த்துவதே சிறந்தது என்பதை ஏன் ஆதினம் மறந்துவிட்டார் என்பதுதான் தெரியவில்லை!நித்யானந்தர் வழியும் ,மதுரை ஆதினத்தின் வழியும் வேறு வேறாக உள்ளது என்பதை அனைவரும் அறிந்து உள்ளனர்.
இதனை இப்பொழுது நித்தியானந்தரும்,மதுரை ஆதினமும் உணர்ந்து உள்ளனர்.அவர்களது சீடர்களும் அமைதியாய் இதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்!
எது எப்படியோ அனைவரும் எதிர் பார்த்த ஒன்று இப்பொழுது நடந்துவிட்டது என்பது அனைவருக்கும் மகிழ்ச்சியே!
No comments:
Post a Comment
தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again