Thursday, September 1, 2011

இந்தியா என்ன வாணிப சந்தையா?

எழுதும் பேனா முதல் ,மடியில் விளையாடும் மடிக்கணினி வரை ;பேசும் மொபைல் முதல் பறக்கும் விமானம் வரை;சின்ன குண்டூசி முதல் பெரிய பெரிய கருவிகள் வரை இப்டி எதுவும் இந்தியாவால் தயாரிக்க படுவதில்லை என்பது அந்த அந்த பொருள்களை பார்த்தாலே நமக்கு தெரியும் .

120 கோடி மக்கள் ,46 % இளைஞர்கள் உள்ள ஒரு தேசம் தன் எதிர்கால தொழில் நுட்பத்திற்கு உலக நாடுகளை சார்ந்து இருப்பது நிச்சயம் வெட்கப்பட வேண்டிய ஒரு விசியமல்லவா ?

ஆங்கிலேயன் போன பிறகு கூட இந்தியா இன்னும் ஒரு வாணிப சந்தையாகத்தானே பார்க்கபடுகிறது ?கல்வி முதல் கலாச்சாரம் வரை;வியர்வை முதல் விஞ்ஞானம் வரை வளர்ச்சி கண்ட என் தேசம் தொழில் நுட்பத்துறையில் எங்கே உள்ளது ?



எந்த வேலையும் செய்யாமல் இருப்பவன் மட்டும் சோம்பேறி அல்ல ;தனக்கான வசதி வாய்ப்புகள் இருந்தும் தன் நிலையில் இருந்து மாறாதவனும் சோம்பேறியே ! என்றான் - அரிஸ்டாட்டில் .

உலகை மிஞ்சும் அறிவுசார் ஆற்றல் உள்ள தேசம் தொடர்ந்து தன்னை ,தன் நாட்டிற்காக எதிர்கால உற்பத்தியாளராக தொழில்நுட்பத்துறையில் கால்பதிக்க தவறுமேயானால் இன்னும் கூட இந்தியா அடிமையின் தேசமே !வாணிப சந்தையே !

1 comment:

  1. Yer every indian should shame for this....Our government should give oppportunity to youngsters....if govt given opportinity then defenitely our india become super power in all field...

    ReplyDelete

தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again