Saturday, March 9, 2013

அவர்கள் நட்போ குண்டுகளால் துளைப்பது!

அவர்கள் நட்போ குண்டுகளால் துளைப்பது!
-----------------------------------------------------------
ஏ ராமேசுவரக் காற்றே
பார்த்து வீசு
நீ கச்சத் தீவைத் தாண்டி வீசினாய் என
குண்டுகளால் துளைக்கப் படலாம்
ஏ ராமேசுவர கடல் அலையே
ஆக்ரோசமாக தவழு உன் தற்க்காப்பிற்க்காக
நீ அமைதியாய் சென்றால்
குண்டுகளால் துளைக்கப் படலாம்
ஏ ராமேசுவர மீன்களே
எதிர் திசையில் நீந்தாதீர்கள்
வலைகளால் தடுக்கப் பட்டு
குண்டுகளால் துளைக்கப் படலாம்
ராமேசுவர மீனவர்களே உங்களுக்கு சொல்ல
என்னிடம் எதுவும் இல்லை......
எது நம் எல்லை என இங்கே நமக்கே தெரியவில்லை...
நம் நட்பு அமைதியாய் இருப்பது
அவர்கள் நட்போ குண்டுகளால் துளைப்பது!

No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again