வரலாற்றுப் பக்கங்களில் ஒரு தேசிய இனத்தை வலுக்கட்டாயமாக பலவழிகளில்
அழிக்கின்ற பேரினவாதத்தின் கொடிய கைகள் இனி எப்போதும் அரவணைக்க போவதில்லை
!,பாறை போன்ற கடினமான மனமும் இனி எப்போதும் மாறபோவதில்லை !
இன்று போர் மேகங்கள் குண்டு
மழைகளைப் பொழிந்து ஆண்டுகள் பல நிறைவடைந்து இருக்கலாம் ஆனாலும் அடக்கி
ஆளும் எண்ணமும் ,ஒரு இனத்தை அழிக்க துடிக்கின்ற எண்ணமும் மறைமுகமாக
ஆரம்பித்து விட்டது என்ற செய்தியை இணையத்திலும் ,செய்திதாள்களிலும் இதயம்
கொண்ட அன்பர்களின் வழியாக நாம் வேதனையுடன் இன்றும் படித்து கொண்டுதான்
இருக்கின்றோம்.
சிங்கள மொழியோ ,புத்த மதமோ ஒருநாளும் ஒரு இனத்தை அழிக்க முனைவது இல்லை .அப்போது யார் இதற்கு காரணம்?ஏன் இவ்வாறு செய்கிறார்கள் ?
கடந்த தொடர் எண் 1 இல் சிங்கள மொழி ,புத்த
மதம் இன அழிவுக்கு காரணம் அல்ல என்று சொல்லி இருந்தோம் .ஏனெனில் ஆயிரம்
,ஆயிரம் வேறுபாடுகள் இருந்தாலும் சக மனிதனை மதிக்க தெரியாதவர்கள் தான்
பிரச்சனைக்கு காரணமே அன்றி எப்போதும் மதங்களும் ,மொழிகளும் எந்த
பிரச்சனைக்கும் காரணமாகாது !
எல்லா மனிதர்களையும் அப்படி நாம் சொல்லிவிட முடியாது
.ஆனால் தமிழனுக்காக தமிழன் மட்டும் தான் போராட வேண்டும் என்பது இல்லை .இதே
தீவில் விடுதலைக்காக எத்தனையோ தமிழர்கள் அன்று சிங்கள மக்களோடு சேர்ந்து
போராடினார்கள் அப்போது தமிழர்கள் நினைத்து இருந்தால் தனி நாடு கேட்டு போய்
இருந்திருக்க முடியும் .ஏன் செய்யவில்லை ?எதற்காக செயவில்லை ? அவர்கள்
சிங்கள மக்களை முழுவதும் நம்பினார்கள் ,அவர்களோடு சேர்ந்து வாழ
எண்ணினார்கள் .அப்படிபட்ட தமிழர்களுக்கு செயும் கைம்மாறு இதுதானா
?அன்புள்ளவர்கள் யோசிப்பார்கள் !
நீங்கள் புத்தனை தேடுகிறீர்கள் நாங்கள் புத்தனை மட்டும்
அல்ல போதி மரத்தையும் அல்லவா தேடுகிறோம் !
No comments:
Post a Comment
தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again