Saturday, May 19, 2012

மும்பையில் ஒரு நாள் -தொடர் 2

கடுமையான மழைக்காலம் அது மும்பையில்.நண்பர்கள் இருவரும் எப்படி லோகமான்ய திலக் போவது,யாரிடம் கேட்பது என்று குர்லா ஸ்டேஷன்னில் அங்கும் இங்கும் அலை பாய்ந்து கொண்டு இருக்கும் பொழுது ஒரு அழுக்கு சட்டை போட்ட லோக்கல் பயன் ஒருவன் அவன் நண்பனோடு அங்கு வந்தான்.அகிலனும் , சோழனும் அவனிடம் லோகமான்ய திலக் எவ்வாறு செல்வது என்று ஒரு வழியாக கேட்டு விட்டார்கள் .அதை புரிந்து கொண்ட அந்த லோக்கல் பயன் (மன்னிக்கவும் லோக்கல் பையன் என்று இங்கு சொல்ல காரணம் அவன் மும்பை வாசி என்பதை பதிவு செய்யவே)இவர்களிடம் குர்லாவில் இருந்து திலக் நகர் போக ரயில் டிக்கெட் எடுக்க வேண்டும் என்றும் ,அவர்களிடம் அதற்க்கான ரயில் டிக்கெட் இருக்கிறதா என்றும் கேட்டான்.
அப்பொழுது அகிலன் மற்றும் சோழனிடம் நான்கு ரூபாய் டிக்கெட் ஒன்று குறைவாய் இருந்தது.அந்த நான்கு ரூபாய் டிக்கெட் பாஸ் ஒன்றை அவன் இவர்களுக்கு கொடுத்தான் அதற்க்கான பைசாவை அவனுக்கு கொடுத்தான் அவன் அதை வாங்க மறுத்து விட்டான்.நான்கு ரூபாய் சில்லறை இல்லாத காரணத்தினால் அவர்கள் இவனிடம் பத்து ரூபாய் கொடுத்து உள்ளனர் .ஆனால் அந்த பையன் அதனை வாங்க வில்லை.

டிக்கெட் வாங்கிய பிறகு அகிலனும் ,சோழனும் திலக் நகர் சென்றார்களா ? அந்த பையன் அவர்களுக்கு என்ன உதவி செய்தான் என்பதை வரும் வாரங்களில் வாசிப்போம்.


உண்மை இன்னும் வலம் வரும்.....



No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again