பீட்சா - திரை விமர்சனம்
ஒரு ஊரில் ஒரு பேய் பங்களா,அங்கெ சென்றவர்கள் எல்லாம் மாயம் - என்ற வரிகளை நீங்கள் சிறுவயதில் கேட்டு இருக்கலாம்!
அந்த ஒரு வரியை வைத்துக் கொண்டு பீட்சா பையன் ,அவன் காதலி என்று திரைக்கதையை மிக நேர்த்தியாக கையாண்டு இருக்கிறார்கள் !
வசனம் ஒவ்வொன்றும் கண கச்சிதம்.
பீட்சா பையன் தன் காதலியை கரம் பிடித்தாரா ? பீட்சா பையனின் கடை முதலாளி என்ன பிசினஸ் செய்கிறார்? அவர் பொண்ணுக்கு பிடித்திருப்பது பேயா?
ஆவிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் கதாநாயகி ஒரு பேயா? இது போன்ற பல கேள்விகளுக்கு நல்ல திருப்பங்களுடன் படம் நகர்ந்து இறுதியில் கூட
திகிலோடு முடிகிறது.
இதயம் பலகீனம் உள்ளவர்கள் தவிர அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு த்ரில்ளீர் படம் நம்ம பீட்சா!
மொத்தத்தில் இந்த பீட்சா ஒரு தமிழனின் கற்பனை திரையில் தந்த சுவையான உணவு!
பீட்சா - சபாஷ் ரகம்!
No comments:
Post a Comment
தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again